Space

9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!


9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

புளோரிடா | மார்ச் 19, 2025: இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவின் புட்ச் வில்மோர், நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த குழு பயணித்த ஸ்பேஸ்‌எக்ஸ் டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.


வெளிச்சம் காணும் சவால்கள்!

குறிப்பாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் 2024 ஜூன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் (ISS) பயணமானனர். முதலில் 8 நாட்கள் பயணம் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அவர்கள் 9 மாதங்களாக ISSயில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

மீட்பு நடவடிக்கை & வெற்றி!

இந்நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ்‌எக்ஸ் இணைந்து டிராகன் விண்கலத்தை பால்கன்-9 ராக்கெட் மூலம் 2025 மார்ச் 15ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம் மார்ச் 16ஆம் தேதி ISSயை சென்றடைந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் 18ஆம் தேதி பூமிக்கு புறப்பட்டனர்.


இந்த வெற்றிகரமான பயணம், மனித விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.



சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடியின் பாராட்டு கடிதம்!

Also View: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடியின் பாராட்டு கடிதம்!

For more details and updates, visit Thagavalulagam regularly!