Tamilnadu News

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் எப்போது?


மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் எப்போது?

திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம், குடும்பத் தலைவியாக உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள 2.26 கோடி குடும்ப அட்டைகளில், இத்திட்டத்தின் பயனடைவோர் எண்ணிக்கை 1.14 கோடியே தாண்டியுள்ளது. இருப்பினும், பல தகுதியான பெண்கள் இந்த உதவித் தொகையிலிருந்து இதுவரை தவறியுள்ளனர். இதனை அடுத்து, "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், மீதமுள்ள தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்த படி, இந்த திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் வரும் மே 29ஆம் தேதி முதல் பெறப்பட உள்ளன. இதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளன. கடந்த முறையைப் போன்று ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெறும் முறை தவிர்க்கப்பட்டு, இந்தமுறை அரசு நேரடியாக முகாம்கள் நடத்துகிறது.

விண்ணப்பங்கள் கிடைத்த பின்னர், அவை உடனடியாக ஆய்வுக்குட்படுத்தப்படும். தகுதியானவர்களுக்கு இரண்டு மாதங்களில் உள்ளாக இந்த தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், முன்னர் விண்ணப்பித்தும் தவறியவர்கள், தகுதியிருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் போன்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

துவக்க காலத்தில் இந்தத் திட்டத்திற்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் வருமானவரி செலுத்துவோர், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளோர், அரசு ஊழியர்கள், ஏற்கனவே அரசு உதவித் தொகை பெறுபவர்கள் என சிலர் நிராகரிக்கப்பட்டனர். அதன் பின் மேல்முறையீட்டு வாய்ப்புகள், இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் போன்ற பரிந்துரைகள் மூலம் சுமார் 1.14 கோடி பெண்கள் தற்போது இந்த திட்டத்தில் நிதியுதவி பெறுகிறார்கள்.

தற்போது மீதமுள்ள 1.12 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 29-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த புதிய விண்ணப்ப செயல்முறை, நீண்டநாள் எதிர்பார்ப்பு கொண்ட பல குடும்பங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய ஆவணங்களுடன் அணுகி, உரிமைத்தொகையை பெற முடியும்.

For more details and updates, visit Thagavalulagam regularly!