Sports News

ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி!


சென்னை: ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 23 அன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்கிறது. இந்த ஹை-வோல்டேஜ் மோதல் சென்னை M.A. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

போட்டிக்கு முன்னதாக, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். மாலை 6.30 முதல் 6.50 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம், இந்த ஆண்டுக்கான தொடரில் மொத்தம் 13 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதை மேலும் பிரம்மாண்டமாக்க, ஒவ்வொரு முக்கிய மைதானத்திலும் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார். CSK ரசிகர்களுக்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி, விசில் போடு இசையில் நெருப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி விவரங்கள்:

1. நாள்: மார்ச் 23, 2025

2. இடம்: M.A. சேப்பாக்கம் ஸ்டேடியம், சென்னை

3. இசை நிகழ்ச்சி: மாலை 6.30 - 6.50 மணி

4. போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

இது, CSK ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஐபிஎல் அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ஐபிஎல் 2025: பிரம்மாண்ட தொடக்க விழா – திரை நட்சத்திரங்களின் களமிறங்கல்!

Also View: ஐபிஎல் 2025: பிரம்மாண்ட தொடக்க விழா – திரை நட்சத்திரங்களின் களமிறங்கல்!

For more details and updates, visit Thagavalulagam regularly!