Political News

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்தை: அமித்ஷா


அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்தை: அமித்ஷா

மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு முறையில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். நான் உங்களுக்குத் தெளிவாகக் கூறுகிறேன், 0.0001% கூட அநீதி நடக்க வாய்ப்பில்லை என அவர் வலியுறுத்தினார்.

டெல்லியில் நடந்த டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2025-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக மீது கடும் விமர்சனம்  செய்தார். அதிமுகவுடன் கூட்டணி குறித்து அவர் மழுப்பலான பதிலளித்தார். தென்னிந்தியாவில் பாஜகவை வலுவாக்குவதே தனது இலக்காக இருப்பதாகவும், எதிர்வரும் தேர்தல்களில் அதிக இடங்களை வெல்ல எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தற்போது ஏன் பேசப்படுகிறது என்பதை விளக்கிய அவர், "போலித் தேசபக்தர்களாக நடித்துக் கொண்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டவர்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் விழித்துக் கொள்வது வேடிக்கையாக உள்ளது" என்று கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்திற்கும், எந்த ஒரு சமூகத்திற்கும் அநீதியினை ஏற்படுத்தாது என்றும், அனைவருக்கும் சமநீதியாக உரிய உரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணியா?

அதிமுகவுடன் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, "அதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சரியான நேரம் வந்தவுடன் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

மொத்தத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறதாகவும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார். மேலும், எந்தக் கூட்டணிக்கும் உறுதி அளிக்க தவறிய அவர், தேர்தலுக்கு முன்பே அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!